Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

திருமண தடை நீங்கும் பரிகாரம் – விரைவில் கல்யாணம் நடைபெற சிறந்த பரிகாரங்கள்

12 லக்னங்களுக்கும் திருமண தடை நீங்கும் பரிகாரம்
மேஷம்

மேஷ லக்னத்திற்கு 2 மற்றும் 7-ம் அதிபதி சுக்கிரன் என்பதால் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் வழிபாடு செய்வது சிறப்பு. தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமைகள் பசுவுக்கு உணவு தந்து பூஜிக்க வேண்டும்.
ரிஷபம்

ரிஷப லக்னத்திற்கு 2-ம் அதிபதி புதன், ஏழாம் அதிபதி செவ்வாய் என்பதால் ஒரு செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் பழனி மலை சென்று முருகனை வழிபட வேண்டும். தொடர்ந்து 27 புதன்கிழமைகள் பறவைகளுக்கு உணவிட வேண்டும்.
மிதுனம்

மிதுன லக்னத்திற்கு 2-ம் அதிபதி சந்திரன், ஏழாம் அதிபதி குரு என்பதால் ஒரு வியாழக்கிழமை குரு ஓரையில் சீரடி சாய்பாபா அல்லது ஸ்ரீ ராகவேந்திரரை வழிபட வேண்டும். 27 திங்கள்கிழமைகள் சிவபுராணம் படிக்க வேண்டும்.
கடகம்

கடக லக்கினத்திற்கு 2-ம் அதிபதி சூரியன், ஏழாம் அதிபதி சனி என்பதால் 9 சனிக்கிழமையில் சனி ஓரையில் முன்னோர் வழிபாடு தவறாமல் செய்ய வேண்டும். 27 வாரம் பசுவுக்கு கோதுமை மற்றும் நாட்டு சர்க்கரையை கலந்து உணவு கொடுப்பது நல்லது.
சிம்மம்

சிம்ம லக்னத்திற்கு 2-ம் அதிபதி புதன், ஏழாம் அதிபதி சனி என்பதால் காரிய சித்தி உண்டாகும் வரை சனிக்கிழமைகளில் திருநள்ளாறு பச்சை பதிகம் படிக்க வேண்டும். பிரதோஷ நாட்களில் பச்சை பயிறு சுண்டல் படைத்து சிவனையும் நந்திகேஸ்வரரையும் வழிபட வேண்டும்.
கன்னி

கன்னி லக்னம்

கன்னி லக்னத்திற்கு2-ம் அதிபதி சுக்கிரன், ஏழாம் அதிபதி குரு எனவே வியாழக்கிழமை குரு ஓரையில் விரும்பிய சித்தர்கள் ஜீவசமாதியில் 16 நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஒன்பது வெள்ளிக்கிழமை மூன்று சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் தானம் வழங்கி ஆசி பெற வேண்டும்.
துலாம்

துலாம் லக்னத்திற்கு 2 மற்றும் ஏழாம் அதிபதி செவ்வாய் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் செவ்வரளி சாற்றி 27 வாரம் முருகனை வழிபட வேண்டும். 9செவ்வாய்க்கிழமைகள் துவரம் பருப்பு சாம்பார் சாதம் செய்து அன்னதானம் வழங்க வேண்டும்.
விருச்சிகம்

விருச்சக லக்னத்திற்கு 2-ம் அதிபதி குரு, ஏழாம் அதிபதி சுக்கிரன் வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீரங்கம் சென்று தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிரதோஷ நாட்களில் கொண்டைக்கடலை சுண்டல் படைத்து சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும்.
தனுசு

தனுசு லக்னத்திற்கு2-ம் அதிபதி சனி, ஏழாம் அதிபதி புதன் 27 புதன்கிழமைகள் மகாவிஷ்ணுவுக்கு துளசி மாலை அணிவித்து வழிபட வேண்டும். சனிக்கிழமைகளில் வயது முதிர்ந்தவர்களுக்கு தண்ணீருடன் உணவு தானம் வழங்க வேண்டும். தலா இரண்டு நபருக்கு 27 வாரங்கள் கொடுக்க வேண்டும்.
மகரம்

மகர லக்னத்திற்கு 2-ம் அதிபதி சனி, ஏழாம் அதிபதி சந்திரன் என்பதால் ஒரு திங்கட்கிழமை திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை வழிபட வேண்டும். பிரதோஷ காலத்தில் கரும்பு சாறு அபிஷேகம் செய்து ஈஸ்வரனையும்நந்தியையும் வழிபட வேண்டும்.
கும்பம்

கும்ப லக்னத்திற்கு 2-ம் அதிபதி குரு, ஏழாம் அதிபதி சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஒருமுறையேனும் சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டும். வியாழக்கிழமையில் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்திற்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.
மீனம்

மீன லக்னத்திற்கு 2-ம் அதிபதி செவ்வாய், ஏழாம் அதிபதி புதன் 27 புதன்கிழமைகள் சக்கரத்தாழ்வாரை துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். காரிய சித்தி உண்டாகும் வரை செவ்வாய்க்கிழமை கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...