Skip to main content

Posts

Showing posts from April, 2026

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

அருள்மிகு பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில் – சக்தி, பக்தி மற்றும் அருள்மிகு அம்மன் தலம் | Arulmigu Pittapurathi Amman Temple

தி ருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது அருள்மிகு பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில். இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னையை, ‘வடக்கு வாய் செல்வி, நெல்லை மாகாளி, செண்பகச்செல்வி’ என்றும் அழைக்கிறார்கள். தற்போது இந்த அம்மன் ‘புட்டாத்தி அம்மன்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.   இங்குள்ள அம்மன் நான்கு திருக்கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும், சூலமும், இடக்கைகளில் பாசமும், கபாலமும் கொண்டு காட்சியளிக் கிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள். அருகில் இரு பக்கமும் படைக்கல தேவியும் (அஸ்திர தேவதை), சீபலி அம்மனும், ராஜராஜேஸ்வரியும் செப்பு படிமங்களில் காட்சியளிக்கிறார்கள். இந்த ஆலயத்தில்  விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி, நந்தி, வள்ளி, முருகன், தெய்வானை, மயில் மற்றும் ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் உள்ளன. அம்மனை கருவறையை அடுத்து அர்த்த மண்ட பமும், அதற்கு அடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அ...

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் Thirukarukavur Garbharakshambigai Temple

இத்திருக்கோயில் இறைவன் திருக்கருகாவூர் மகாதேவர், திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லைவனமுடைய மகாதேவர் என்றும் அழைக்கப்படுகிறார். முன்னொரு காலத்தில் இத்தலம் இருக்குமிடம் முல்லைவனமாக இருந்தது. அந்த அழகிய வனத்தில் கௌதமர், கார்க்கேயர் என இரு முனிவர்கள் இறைவனை வேண்டி தவமிருந்தனர். இந்த இரு இறை அன்பர்களுக்கும் நித்துருவர்-வேதிகைதம்பதியினர், முல்லை வனத்திலேயே தங்கி இருந்து சேவை செய்து வாழ்ந்து வந்தனர். தம்பதியர் இருவரும் இறைப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மனதில் பெரிய குறை ஒன்றிருந்தது. தங்களுக்கு குழந்தைப் பேறு இல்லையே என்று வருத்தம் இருந்தது. அந்த மனக்குறையை முனிவர்களிடம் கூறினர். அதற்கு அம்முனிவர் பெருமான்கள் இந்த முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வணங்கிட நீங்கள் வேண்டி நிற்பது கிடைக்கும் என வாழ்த்தினர். அவ்வாறே அம்மையப்பனை வணங்கி மக்கட்பேறு கிடைக்கப் பெற்றனர். இவ்வாறு வேதிகை கருவுற்றிருந்த சமயம், கணவர் இல்லாமல் வேதிகை மட்டும் தனித்திருந்த நேரத்தில் சுகமான சுமையான கருவை சுமந்திருந்த காரணத்தினால் சற்றே மயக்கத்தில் கண்ணயர்ந்த சமயத்தில் ஊர்த்துவபாதர் என்...

தோஷம் நீக்கும் தங்க & வெள்ளி பல்லிகள் கோயில்கள்

தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி - 16 கைகளுடன் காட்சி தரும் பிரம்மாண்ட சக்கரத்தாழ்வார் காஞ்சி மாநகரின் கம்பீரமான அடையாளமாகவும், 108 திவ்ய தேசங்களில் மிக முக்கியமான தலமாகவும் விளங்குவது அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்.  தோஷம் நீக்கும் தங்க - வெள்ளி பல்லிகள். இந்தக் கோயிலின் மேல்தளத்தில் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட இரு பல்லி உருவங்கள் உள்ளன. இதன் பின்னணியில் கதை உண்டு. கௌதம முனிவரின் சீடர்கள் இருவர், கவனக்குறைவால் தீர்த்தத்தில் விழுந்த பல்லியைப் பார்க்கத் தவறியதால் சாபம் பெற்று பல்லிகளாக மாறினர். இத்தலத்தில் வரதராஜரை வணங்கி சாப விமோசனம் பெற்றனர். சூரிய, சந்திரர்களைச் சாட்சியாகக் கொண்டு அமைந்த இந்தத் தங்க (சூரியன்), வெள்ளி (சந்திரன்) பல்லிகளைத் தொட்டு வணங்கினால், நம் உடலில் பல்லி விழுவதால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். மேலும், தீராத வியாதிகளும் தீரும். 16 கைகளுடன் பிரம்மாண்ட சக்கரத்தாழ்வார். கோயிலின் அனந்தசரஸ் தீர்த்தக் குளத்தின் கரையில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறார் சுதர்சன ஆழ்வார் எனும் சக்கரத்தாழ்வார். தமிழகத்திலேயே வேறு எங்கும் காண முடியாத வகையில், மி...

பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் – வரலாறு | Pittukku Man Sumandha Peruman

மதுரை என்றாலே அது திருவிளையாடல் களின் ஊர். சிவபெருமான் தன் பக்தர்களுக்காகப் பலமுறை நேரில் வந்து அருள் புரிந்த தலம். அவற்றில் மிக உருக்கமானதும், இறைவனின் எளிமையைக் காட்டுவதுமான பிட்டுக்கு மண் சுமந்த படலம். வைகை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்   பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் மதுரையை ஆண்டு வந்த காலம் அது. ஒருமுறை மதுரையில் விடாது பெய்த மழையினால் வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டதால், நகருக்குள் நீர் புகாமல் தடுக்க மன்னன் ஒரு கட்டளையிட்டான். அதன்படி, மதுரையில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்காரரும் ஆளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு இடத்தைப் பிடித்து, மண்ணைப் போட்டு வைகை ஆற்றின் கரையை பலப்படுத்த வேண்டும். மூதாட்டி வந்தியின் பக்தி மதுரையில் வந்தி என்ற மூதாட்டி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. பிட்டு விற்று பிழைப்பு நடத்தி வந்த அவள், சிவபெருமான் மீது அசைக்க முடியாத பக்தி கொண்டவள். தினமும் தான் செய்யும் முதல் பிட்டை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு, சிவனடியார்களுக்கு தானம் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தாள். மன்னனின் கட்டளை வந்திக்கும் வந்தது...