Skip to main content

Posts

Showing posts from March, 2026

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

Yoni Porutham Tamil – யோனி பொருத்தம் திருமணத்திற்கு முக்கியமா?

ஜோதிட ரீதியாக திருமணப் பொருத்தங்களை ஆராயும் போது, யோனி பொருத்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தம்பதியினரிடையே இருக்கும் உடல் ரீதியான ஈர்ப்பு, தாம்பத்திய சுகம் மற்றும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்யோன்யத்தைப் பற்றி கூறுகிறது. மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களும் 14 விலங்குகளின் யோனிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. யோனி பொருத்தத்தின் வகைகள் இந்த பொருத்தம் பொதுவாக நான்கு நிலைகளில் கணக்கிடப்படுகிறது: முதல்  இரண்டாவது  உத்தமம் (சிறப்பு) இருவருக்கும் ஒரே யோனியாக இருந்தால் (உதாரணமாக: இருவருக்கும் பசு யோனி), அது தாம்பத்திய வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். மத்திமம் (சுமார்) பகை இல்லாத வேறு வேறு விலங்குகளாக இருந்தால் அது சுமாரான பலனைத் தரும். அத்தமம் (சாதாரணமானது) ஒருவருக்கு ஆண் யோனியும், மற்றொருவருக்கு பெண் யோனியும் மாறுபடும் போது இது வரும். அதமம் (பகை) இயற்கை எதிரிகளாக இருக்கும் விலங்குகளின் யோனி அமைந்தால்  (உதாரணமாக: பாம்பு மற்றும் கீரி)  அது தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு...

இராமேஸ்வரம் பார்க்க வேண்டிய இடங்கள்

ராமர் பாதம் சாக்சி ஹனுமன் ராமர் தீர்த்தம் லக்ஷ்மன் தீர்த்தம் சீதா தீர்த்தம் ஐந்துமுக ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவில் தனுஸ்கோடி  வில்லுன்டி தீர்த்தம் விவேகாநந்தர் பாறை  பாம்பன் பாலம் அபே ஆஞ்சநேயர்  இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்ற நகரம் இருக்கிறது. இது  பாம்பன் தீவிலிருந்து  சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இலங்கை மன்னார் தீவு, உள்ளது..,இந்திராகாந்தி பாலம்  (பாம்பன்பாலம்) மூலம் நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.இராமேஸ்வரத்திற்கு  சென்னைமதுரை மற்றும் பல மாநிலங்களிலிருந்தும்   இரயில் போக்குவரத்து இருக்கிறது . இராமேஸ்வரம்  இந்தியாவில் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இது இந்திய தீபகற்பத்தில் மிக முனையில்மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. புராணத்தின் படி ராமரால் ஆதாம் பாலம் கட்டப்பட்டது. ராமன் சீதையை மீட்க ராவணனிடம்போர் புரிந்து கொன்றான்.ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வண...

பித்ரு தோஷ நிவர்த்தி பூஜை – பரிகாரம் & செய்யும் முறை

இந்த வகை பூஜை முறையானது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சித்தர்களும், ரிஷிகளும் கடைபிடிக்கும் வழிபாட்டுமுறையாகும், இந்த தோஷம் ஒருசமயம் சிவனுக்கும் நிகரான அகத்தியர், கொங்கணர் போன்ற முனிவர்களையே தன் சித்திகளை அடையாவண்ணம் தடுத்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் வேள்விகள் செய்து கோவில் கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்காது. நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.  நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்...

பித்ரு தோஷம் பரிகாரம் | முன்னோர் தோஷ நிவாரணம்

பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது. ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது. ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஒருவர் தன் முற்பிறவியில் முறையற்ற கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது. பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்...