Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

தரித்திரம் நீங்க சிறந்த பரிகாரம் | Best Remedies to Remove Poverty in Tamil

Post Image

தரித்திரம் நீங்கி செல்வ வளம் பெற 

ரிஷபம்
முறையாக விளக்கு ஏற்றி, செவ்வாய், வெள்ளி பூஜை செய்து, கோவில் கோவிலாக சுற்றி திரியும் சிலருக்கு நல்லது நடக்காமல், தரித்திரம் பிடித்தது போல சில சமயங்களில் ஆட்டிப் படைக்கும். இந்த நிலையில் இருப்பவர்கள் விநாயகருக்கு விளக்கு ஏற்றுவது நல்லது. என்ன நடந்தாலும் இறைவன் பார்த்துக் கொள்வார் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கும் பொழுது, அந்த நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க, பல தடைகள் வரும்.
முழு முதல் கடவுளான இந்த விநாயகப் பெருமானை வழிபட்டு வருபவர்களுக்கு சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இப்படி நம்பிக்கை இழந்து வாழ்க்கையில் தரித்திரம் பிடித்தது போல எப்போதும் கெட்டதே நடந்து கொண்டு இருந்தால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள் அல்லது தெருவில் இருக்கும் பிள்ளையாருக்கு இந்த விளக்கை ஏற்றினாலும் சரி தான். மரத்தடி பிள்ளையாருக்கு ஏற்றுவது இன்னும் சிறப்பான பலன் தரும்.

ஞாயிற்றுக்கிழமையில் விநாயகரை தேடிச் சென்று ஒரு சுத்தமான மண் அகல் விளக்கில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றுங்கள். இரண்டு பஞ்சு திரிகளை ஒன்றாக திரித்து தீபம் ஏற்ற வேண்டும். தனித்த திரி போடக் கூடாது, இது நம்மை தனிமைப்படுத்தும். தீபம் ஏற்றிய பின்பு பிள்ளையாரை மும்முறை வலம் வந்து, தோப்புக்கரணம் போடுங்கள். 

இது போல ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் விநாயகர் கோவிலுக்கு அல்லது மரத்தடி பிள்ளையாருக்கு நல்லெண்ணெய் தீபம் தொடர்ந்து ஏற்றி வர வேண்டும். ஒன்பது வாரங்கள் ஏற்றும் பொழுது இதுவரை இருந்த தரித்திரம், பீடை அனைத்தும் ஒழிந்து மெல்ல மெல்ல உங்கள் நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். 

இந்த பதிவு உங்களுக்கு எப்படி இருந்தது?

👍 0 ❤️ 0 😮 0 👏 0 🔥 0

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...