- ராமர் பாதம்
- சாக்சி ஹனுமன்
- ராமர் தீர்த்தம்
- லக்ஷ்மன் தீர்த்தம்
- சீதா தீர்த்தம்
- ஐந்துமுக ஆஞ்சநேயர்
- கோதண்டராமர் கோவில்
- தனுஸ்கோடி
- வில்லுன்டி தீர்த்தம்
- விவேகாநந்தர் பாறை
- பாம்பன் பாலம்
- அபே ஆஞ்சநேயர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்ற நகரம் இருக்கிறது. இது பாம்பன் தீவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இலங்கை மன்னார் தீவு, உள்ளது..,இந்திராகாந்தி பாலம் (பாம்பன்பாலம்) மூலம் நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.இராமேஸ்வரத்திற்கு சென்னைமதுரை மற்றும் பல மாநிலங்களிலிருந்தும் இரயில் போக்குவரத்து இருக்கிறது . இராமேஸ்வரம் இந்தியாவில் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இது இந்திய தீபகற்பத்தில் மிக முனையில்மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. புராணத்தின் படி ராமரால் ஆதாம் பாலம் கட்டப்பட்டது. ராமன் சீதையை மீட்க ராவணனிடம்போர் புரிந்து கொன்றான்.ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயில் மூலவருக்கு இராமநாத சுவாமி என்றும் ராமேஸ்வரம் என்று பெயர் ஆனது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.
கோவிலின் வெளிப் பிரகாரத்தில் இருபத்தி இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.ராமன் ஒரு சத்ரியன், ராவணன் ஒரு பிராமணன். பிராமணனைக் கொன்ற பிரம்ம்ஹத்தி தோஷம் நீங்க சிவனை ராமன் வழிபட்டதால் ராம ஈஸ்வரம். ராமன் வழிபட்ட சிவனை, இருபத்தி இரண்டு தேவதைகள் தங்களுக்கென தனித் தனி தீர்த்தங்கள் அமைத்து அவற்றில் இருந்து நீர் எடுத்து வழிபட்டு வருவதாக நம்பிக்கை. அந்த தீர்த்தங்களில் நீராடி வழிபட்டால் சகல தோஷமும் நீங்கும். சந்-தோசம் பெருகும்.
தீர்த்தங்களின் பெயர்கள்
- மகாலட்சுமிதீர்த்தம்
- சாவித்திரி தீர்த்தம்
- காயத்ரி தீர்த்தம்
- சரஸ்வதி தீர்த்தம்
- சங்கு தீர்த்தம்
- சக்கர தீர்த்தம்
- சேதுமாதவ தீர்த்தம்
- நள தீர்த்தம்
- நீல தீர்த்தம்
- கவய தீர்த்தம்
- கவாச்ச தீர்த்தம்
- கந்தமாதன தீர்த்தம்
- பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்
- சர்வ தீர்த்தம்
- சிவா தீர்த்தம்
- சத்யமிர்த்த தீர்த்தம்
- சந்திர தீர்த்தம்
- சூரிய தீர்த்தம்
- கங்கா தீர்த்தம்
- யமுனா தீர்த்தம்
- கயா தீர்த்தம்
கடல் நீர் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. சென்னை திருச்செந்தூர் கன்னியாகுமரி என்று எங்குமே இல்லாத கடலை இங்கு பார்க்கலாம். கடலின் அழகும், பரந்து விரியும் கடற்கரையும் கவிதை பேசுகிறது. காமிராக் கண்களுக்கு ஏற்ற விருந்து. தனுஷ்கோடியின் மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால் இங்கே வங்காள விரிகுடாவும், இந்தியப் பெருங்கடலும் ஒரே இடத்தில சங்கமிகின்றன. வங்காள விரிகுடா பெண்கடல். இந்தியப் பெருங்கடல் ஆண் கடல். சாதுவான பெண் கடல் அலைகள் ஏதுமின்றி அமைதியாய் ஒருபக்கமும். ஆற்பரிக்கும் ஆண்கடல் மிரட்சியாய் அதன் அருகிலும் காட்சியளிப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
ராமர் பாதம்
ராமர் இங்கு இருந்து தான் இலங்கையை முதன் முறையாகப் பார்தரம். அது ஒரு சிறிய குன்று. ராமேஸ்வரத்தின் மொத்த காட்சியையும் இங்கிருந்து காணலாம்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
இங்கே ராமர் பாலம் கட்ட உதவிய மிதக்கும் கற்களை வைத்துள்ளனர். மேலும் ஆஞ்சநேயருக்காக முப்பது வருடங்களுக்கும் மேல் எரியும் அணையா விளக்கு ஒன்று உள்ளது.
Comments
Post a Comment