பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது.
ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.
ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர
என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு,
| அவதாரங்கள் | நவகிரகங்கள் |
|---|---|
| ஸ்ரீ ராமாவதாரம் | சூரியன் |
| ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் | சந்திரன் |
| ஸ்ரீ நரசிம்மவதாரம் | செவ்வாய் |
| ஸ்ரீ கல்கியவதாரம் | புதன் |
| ஸ்ரீ வாமனவதாரம் | குரு |
| ஸ்ரீ பரசுராமாவதாரம் | சுக்ரன் |
| ஸ்ரீ கூர்மவதாரம் | சனி |
| ஸ்ரீ மச்சாவதாரம் | கேது |
| ஸ்ரீ வராகவதாரம் | ராகு |
| ஸ்ரீ பலராமவதாரம் | குளிகன் |
என்று, பெருமாளின் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,
| நவதிருப்பதி | நவகிரகங்கள் ஸ்தலம் |
|---|---|
| ஸ்ரீவைகுண்டம் | சூரிய ஸ்தலம் |
| வரகுணமங்கை (நத்தம்) | சந்திரன் ஸ்தலம் |
| திருக்கோளூர் | செவ்வாய் ஸ்தலம் |
| திருப்புளியங்குடி | புதன் ஸ்தலம் |
| ஆழ்வார்திருநகரி | குரு ஸ்தலம் |
| தென்திருப்பேரை | சுக்ரன் ஸ்தலம் |
| பெருங்குளம் | சனி ஸ்தலம் |
| இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) | ராகு ஸ்தலம் |
| இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) | கேது ஸ்தலம் |
குறிப்பு: இது பொதுபலன் — இந்தத் தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகளைச் சார்ந்தவை.
Comments
Post a Comment