Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

ஜோதிடத்தில் முப்பிறவி, மறுபிறவி & அடுத்த பிறவி – கர்ம விதி மற்றும் வாழ்க்கைச் சுழற்சி விளக்கம்

அறிமுகம்
இந்த உலகில் பிறப்பு, மறுபிறப்பு, முப்பிறவி என்கிற கருத்துகள் ஆயிரம் ஆண்டுகளாகவே வேத ஜோதிடத்தில் பேசப்பட்டு வருகிறது. ஒருவரின் முற்பிறவி (Past Life), இப்பிறவி (Present Life), அடுத்த பிறவி (Next Birth) பற்றிய தகவல்கள் அனைத்தும் லக்னம், லக்னாதிபதி, கேது, 5ஆம் இடம், 12ஆம் இடம் போன்ற கிரகஸ்தானங்களின் மூலம் அறிய முடியும்.
ஜோதிடத்தில் முப்பிறவி

வேத ஜோதிடத்தில் முப்பிறவி என்பது முற்பிறப்பு (Past Life), இப்பிறப்பு (Present Life), மறு பிறப்பு / அடுத்த பிறவி (Next Birth) என்பவற்றின் சுழற்சியைக் குறிக்கிறது. ஜோதிட சாஸ்திரப்படி, மனித ஆன்மா பிறவி பெறுவது பாப புண்ணியம், கர்ம பலன், கிரக நிலை, பூர்வ ஜென்ம செயல்கள் அவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவரின் அடுத்த பிறவி பொதுவாக லக்னாதிபதி, யாருடன் சேர்ந்து இருக்கிறான்,யாரின் பார்வை பெற்றிருக்கிறான், எந்த இடத்தில் transit ஆகியிருக்கிறான், லக்னாதிபதியின் பார்வை எங்கு விழுகிறது இதன் மூலமாக தெரிந்துகொள்ளப்படுகிறது. லக்னாதிபதி மூலம் முப்பிறவி கணிப்பது லக்னாதிபதி மிகவும் முக்கியமான கிரகமாகும். முற்பிறவியில் நீங்கள் என்ன செய்தீர்கள், இப்பிறவியில் எப்படி நடப்பீர்கள், அடுத்த பிறவியில் என்ன நிலை வரும் என்பவற்றை தீர்மானிக்கும். 1. லக்னாதிபதி – இணைந்துள்ள கிரகம் உங்கள் லக்னாதிபதி எந்த கிரகத்துடன் சேர்ந்திருக்கிறது என்பதே உங்களின் குணம், விதி, கர்ம பலன், மறுபிறவி தரம் எல்லாவற்றையும் நிர்ணயிக்கும். 2. லக்னாதிபதிக்கு பார்வை இடும் கிரகம் முற்பிறவியில் செய்த நற்கர்மம் அல்லது பாபகர்மம் என்பதை வெளிப்படுத்தும். 3. லக்னாதிபதியின் பார்வை பிறவிகளில் கடந்து வந்த கர்மங்கள் அடுத்த பிறவியில் சந்திக்கும் காரியங்கள் எதற்கும் காரணமாக இருக்கும். 

12ஆம் இடத்தில் கேது

12ஆம் இடத்தில் கேது மறுபிறவி இல்லை. வேத ஜோதிடத்தின் மிக முக்கியமான விதி. கேது = மோட்சக் காரகன், 12ஆம் வீடு = மோட்ச ஸ்தானம் இந்த இரண்டு ஒன்று சேர்ந்தால் கர்ம பந்தங்கள் துண்டிக்கப்படும். பிறவி சுழற்சி முடியும். ஆன்மா விடுதலையை அடையும். அதனால் இப்படிப்பட்டவர்கள் அடுத்த பிறவி பெறுவதில்லை என்று முனிவர்கள் கூறியுள்ளனர். கூடுதல் விதி 12ஆம் இடம் அதிபதி 12ஆம் இடத்திலேயே இருந்தாலும், மறுபிறவி இல்லாமல் ஆன்மா விடுபடும்.

5ஆம் இடம் – பூர்வ புண்ணிய ஸ்தானம்

5ஆம் இடம் (Putra sthana) என்பது பிறந்தவரின் முன் ஜென்ம புண்ணியத்தை காட்டும் மிகவும் முக்கியமான வீடு. இதன் மூலம் முற்பிறவியில் அவர் செய்த நற்செயல்கள், இப்பிறவியில் உருவாகும் நற்கர்மங்கள், அடுத்த பிறவியில் கிடைக்கும் அனுபவங்கள் அனைத்தும் தெரிந்துகொள்ளலாம். 5ஆம் இடத்தின் நிலை, நற்பலன்கள் - உயர்ந்த அடுத்த பிறவி, பாபபலன் -  தாழ்ந்த அடுத்த பிறவி 

பிறந்த நேரம் மூலம் முப்பிறவி கணிக்கும் முறை

முப்பிறவியை அறிய ஒரு மிக அரிய ஜோதிட முறை உள்ளது. குழந்தையின் பிறந்த நேரத்திலிருந்து 10 மாதங்கள் பின்னோக்கி கணிக்கப்படுகிறது. அந்த தருணத்தில் கரு உருவான நேரம், கருவில் ஆன்மா புகுந்த நேரம், அந்த நேரத்தில் கிரகங்கள் எப்படி இருந்தன. அவற்றின் அடிப்படையில் முற்பிறவி, இப்பிறவி, அடுத்த பிறவி மிக துல்லியமாக கணிக்கப்பட்டுவிடும். இந்த முறை பல முனிவர் பேரரசர்கள் பயன்படுத்தியவை. மறுபிறவியை நிர்ணயிக்கும் முக்கிய கிரகங்கள் கேது – மோட்சம், மறுபிறவி இல்லாமை சனி – கர்மா, பாபம், தண்டனை குரு – பூர்வ புண்ணியம் ராகு – ஆசைகள், பிறவி தாகம் சந்திரன் – மனசு, ஆன்ம நினைவுகள் 

குறிப்பு: இது பொது பலன் — உங்கள் தனிப்பட்ட பலனுக்கு ஜாதக மதிப்பு அவசியம்.


Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...