Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

12 ராசிக்காரர்கள் தங்கள் ராசிக்குரிய மரத்தை வளர்த்தால் – ராசி அடிப்படையில் உங்களுக்கு ஏற்ப மரங்கள்

12 ராசிக்காரர்களுக்கும் தங்கள் ராசிக்குரிய மரத்தை வளர்த்தால்
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மரம் ராசியானதாக இருக்கும். அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய அல்லது நட வேண்டிய மரங்கள் என்னென்ன? இதனால் அவர்களுக்கு நடக்கப் போகும் அதிசயங்களும் என்ன? என்பது தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். நம் ராசிக்குரிய மரங்களை வீட்டில் வளர்ப்பதை விட, சமுதாயத்திற்காக சாலை ஓரங்களில் வளர்த்து தானம் செய்யும் பொழுது கூடுதல் பலன்கள் கிடைக்கும். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.
மேஷம் (Aries)


மேஷ ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசிக்குரிய செவ்வரளி செடியை வீட்டில் பின்புறமாக அல்லது நெடுஞ்சாலைகளில் நட்டு வளர்க்கப்பட்டு வந்தால் வாழ்க்கையில் சகல யோகங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். செவ்வரளி மலரை பைரவருக்கு சாற்றி வழிபட்டு வந்தால் தீராத நோயெல்லாம் தீர்ந்துவிடும்.
ரிஷபம் (Taurus)

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசிக்குரிய அத்தி மரத்தை வீட்டில் அல்லது சாலையோரங்களில் வளர்த்து வருவதன் மூலம் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இறையருள் பெறுவதற்கு அத்தி மரத்தை 11 முறை வலம் வந்து வழிபட நன்மைகள் நடைபெறும்.
மிதுனம் (Gemini)

மிதுன ராசியில் பிறந்தவர்கள் சிவாலயங்களில் வளர்க்கப்படும் வில்வ மரத்தை வழிபட்டு வர நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறும். பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். வில்வ மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது என்ற ஒரு ஐதீகம் உண்டு. இது எந்த அளவிற்கு சரி என்றாலும் கோவிலில் சென்று இம்மரத்தை வலம் வருவது சிறப்பான பலன்களை கொடுக்கும்.
கடகம் (Cancer)

கடக ராசியில் பிறந்தவர்கள் அதீத சக்திகள் கொண்ட மற்றும் திருத்தலைச்சங்காடு, திருக்கஞ்சனூர் போன்ற கோவில்களில் தல விருட்சமாக இருக்கும் பலா மரத்தை வீட்டில் அல்லது பூங்கா போன்ற பொது இடங்களில் வளர்த்து வந்தால் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் நீங்கி செல்வ வளம் அதிகரிக்கும்.
சிம்மம் (Leo)

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் குருந்த மரத்தை வழிபட்டு வரவும். இந்த மரத்தை பொது இடங்களில் வளர்ப்பது முன்ஜென்ம பாவ வினைகளை கூட தீர்க்கக் கூடிய பரிகாரமாகும். திருப்பெருந்துறையில் ஆவுடையார் கோவிலில் தல விருட்சமாக இம்மரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கன்னி (Virgo)

கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாமரத்தை வளர்த்து வருவது மற்றும் அதனை தானமாக கொடுப்பது பெறற்கரிய பேற்றைப் பெற்றுக் கொடுக்கும். தெய்வீக ஸ்தலங்களில் இருக்கும் மாமரத்தை வலம் வருவது கூடுதல் பலன்களை கொடுக்கும். மாமரத்தை தானமாகவும் கொடுத்து வரலாம்.
துலாம் (Libra)

துலாம் ராசியில் பிறந்தவர்கள் மகிழ மரத்தை வளர்த்து வருவது நல்ல ஒரு அறிவாற்றலை கொடுக்கக் கூடியது ஆகும். வீட்டில் அல்லது பொது இடங்களில் வளர்ப்பது வருமான தடையில் இருக்கும் பிரச்சனைகளை அகற்றும். குடும்பத்தில் அமைதியை நிலவச் செய்யும் என்பது ஐதீகம்.
விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கருங்காலி எனப்படும் மரத்தை வளர்த்து வருவது பேரதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். பூங்கா போன்ற பொது இடங்களில் அல்லது உங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வளர்த்து வருவது மேலும் மேலும் வளர்வதற்கான முன்னேற்றத்தை கொடுக்கும்.
தனுசு (Sagittarius)

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு அரச மரத்தை வழிபடுவது சிறப்பான பலன்களை கொடுக்கும். அரச மரத்தில் இருக்கும் அதீதமான சக்தி உங்கள் ராசிக்கு வருமான ரீதியான பிரச்சனைகளை எளிதாக தீர்க்க கூடியது ஆகும். அரச மரத்தினுடைய தலைப்பகுதியில் சிவனும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், வேர்ப்பகுதியில் பிரம்மனும் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மகரம் (Capricorn)

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு ஈட்டி மரம் என்று கூறப்படும் இந்த மரத்தை சமுதாய நன்மைக்காக நடுவது வாழ்க்கையில் இருக்கும் இன்னல்களை நீக்கும். எவ்வளவு கடன் பிரச்சினைகள் இருந்தாலும் எளிதில் தீரும் என்பது ஐதீகம். ஈட்டி மரம் தல விருட்சமாகக் கொண்ட கோவில்களுக்குச் செல்வது பெரும் பாக்கியத்தை உண்டு செய்யும்.
கும்பம் (Aquarius)

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு வன்னி மரம் சிறப்பான மரமாக கூறப்பட்டுள்ளது. பொது நன்மைக்காக வன்னி மரத்தை நீங்கள் வளர்த்து வந்தால் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ளலாம். வன்னி மரத்தை தலவிருட்சமாகக் கொண்டுள்ள சிவபெருமானை வழிபடுவது சகல யோகங்களையும் பெற்று தரும்.
மீனம் (Pisces)

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு புன்னை மரம் சிறப்பான மரமாகும். இம்மரத்தை பொது இடங்களிலும், கோவில்களிலும் வளர்த்து வர எந்த விதமான தடைகளும் நீங்கி வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். புன்னை மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோவில்களுக்குச் சென்று வருவது சகல, சவுபாக்கியங்களையும் கொடுக்கும்.

குறிப்பு: இது பொது ராசிபலன் — உங்கள் தனிப்பட்ட பலனுக்கு ஜாதக மதிப்பு அவசியம். 

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...