Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் | சனி ஸ்தலம் | நவகைலாயம் 6வது ஸ்தலம் திருத்தல இருப்பிடம்

Post Image

ஸ்ரீவைகுண்டம் – சனி தோஷ நிவாரணம் தரும் நவகைலாயம் 6வது ஸ்தலம்

நவகயிலாயத்தில் ஆறாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சனி பகவான் அம்சமாக விளங்குகிறார். 
"தோமாம் பொழிலுடுத்த தென் வைகுந்தக் கயிலை" என்கிறார் குமரகுருபர சுவாமிகள். நவதிருப்பதி நாயகரின் பெயர் வைகுண்டபதி. நவ கைலாயபிரானின் பெயர் கைலாசநாதர் சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. கைலாச நாதர் சுயம்புலிங்கம்.

ஓவியங்கள்

கோயிலின் உட்புறத்தில் கிழக்கில் திருக்கல்யாண மண்டப விதானத்தில் மூலிகைகளால் வரையப்பட்ட நவ கைலாய ஓவியங்கள் உள்ளன. நந்தவனத்துக்குச் செல்லும் முன்மண்டபத்தில் உரோமச முனிவர் வடிவமைக்கப்பட்டுள்ளார். வடக்குப் பகுதியில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சி அம்பிகையும் உள்ளனர். இங்கு கைலாசநாதர், சிவகாமி அம்மை, விஸ்வநாதர், விசாலாட்சி, அம்பிகை ஆகியயோரின் கருவறைகளின் மேல் அழகான விமானங்கள் உள்ளன.

சிற்பங்கள்

இக்கோயிலில் பூதநாதர் உள்ளார். இவர் இந்தக் கோயிலின் காவல் தெய்வம் மட்டுமல்ல இந்த ஊர் மக்களின் காவல் தெய்வம் சாஸ்தாவும் ஆவார். நவக்கிரகங்களும் இந்தக் கோயிலில் உள்ளன. இந்த கோயிலின் காவல் தெய்வங்களான அக்னி பத்ரர், வீரபத்ரர் சிற்பங்கள் வணங்கத்தக்கவை. கோயில் சந்தனசபாபதி மண்டபத்தில் யாழித் தூண்கள் உள்ளன. யாளியின் வாயில் உருளும் கல் உருண்டைகள் உள்ளன.

திருத்தல இருப்பிடம்

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷனிலிருந்து 2 கிமீ தொலைவில் தாமிரபரணி வட கரையில் இக்கோயில் உள்ளது.

மூலவர் : கைலாசநாதர்
அம்பிகை : சிவகாமி அம்மன்

📌 முக்கிய தகவல்கள்

108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்ற விஷ்ணு கோவிலும் இந்த ஊரில் இருக்கிறது.

நவகைலாயம் – 9 கோவில்கள் மற்றும் கிரக தொடர்பு

1️⃣ பாபநாசம் – சூரியன்

பாபநாசம் சிவன் கோவில்
பாவநாசம் தரும் தலம். சூரிய தோஷ நிவாரணத்திற்கு முக்கியமானது.

2️⃣ சேரன்மகாதேவி – சந்திரன்

சேரன்மகாதேவி கைலாசநாதர் கோவில்
மனஅமைதி மற்றும் குடும்ப நலத்திற்காக வழிபடப்படும் தலம்.

3️⃣ கோடகநல்லூர் – செவ்வாய்

கோடகநல்லூர் அபிமுக்தீஸ்வரர் கோவில்
செவ்வாய் தோஷம் நீங்க வேண்டி தரிசிக்கப்படும் தலம்.

4️⃣ குன்னத்தூர் – ராகு

குன்னத்தூர் கைலாசநாதர் கோவில்
ராகு தொடர்பான பிரச்சனைகள் நீங்க வழிபடப்படுகிறது.

5️⃣ முறப்பநாடு – குரு

முறப்பநாடு கைலாசநாதர் கோவில்
குரு கிரக அருள் பெற தரிசிக்கப்படும் தலம்.

6️⃣ ஸ்ரீவைகுண்டம் – சனி

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில்
சனி தோஷ நிவாரணத்திற்குப் பிரசித்தமானது.

7️⃣ தென்திருப்பேரை – புதன்

தென்திருப்பேரை கைலாசநாதர் கோவில்
புத்திசாலித்தனம் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காக வழிபடப்படுகிறது.

8️⃣ ராஜபதி – கேது

ராஜபதி கைலாசநாதர் கோவில்
கேது தோஷ நிவாரண தலம்.

9️⃣ சேர்ந்தபூமங்கலம் – சுக்கிரன்

சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவில்
திருமண தடை நீங்க வழிபடப்படும் தலம்.


இந்த பதிவு உங்களுக்கு எப்படி இருந்தது?

👍 0 ❤️ 0 😮 0 👏 0 🔥 0

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...