இவர் கி.பி.8 ம் நூற்றூண்டில் வாழ்ந்தவராக கருதப்படும் ஆதிசங்கரர் கேரளாவில் காலடி என்ற சிற்றூரில் அவதரித்தார்.
அபிநவகுப்தன் என்னும் பகைவனால் வளர்க்கப் பெற்ற வேள்வியால் காசநோயால் அவதிபட்டு வந்தார் ஆதிசங்கரர். எல்லா ஆலயங்களுக்கும் சென்று வந்தார்.அவருக்கு குணமாகவில்லை.பின்பு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று அங்கு 48 நாட்கள் இலைவிபூதி உண்டார். அதனால் வயிற்று வலி குணமானது. இன்றும் அங்கு இலைவிபூதி கொடுக்கப்படுகிறது.அங்கு குகை கோயிலில் பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டு 33 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்கம் பாடினார்.
"கண்டால்நின் இலைநீறு கைகால் வலிப்புக்
காசம் கயம்குட்ட முதலாய நோயும்
விண்டோடு மேபூத பைசாசம் யாவும்
வினையாவு மேசெந்தி லமர்தேவ தேவே"
பாடல் எண் --- 25
பன்னீரிலை விபூதியினால் கை கால்கள் வலிப்பு, காசநோய், குஷ்டம், வயிற்றில் வலி, பயம், பூத தொல்லை முதலியவற்றில் நிவர்த்தி அடையும்.
ஆதிசங்கரர் சிலை மூலவரின் எதிரில் ஒரு தூணில் உள்ளது.இதை காண வேண்டுமானால் தர்மதரிசன வழியாக சென்றால் ஒரு மர பெட்டியால் தூணோடு மாட்டி வைத்திருப்பதை காணலாம். ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலின் அற்புதம் இதுவாகும். இதை வீடுகளில் வைத்தால் செல்வம் பெருகும். பூமி பூஜையின் போது தோண்டும் குழியில் பன்னீர் இலை விபூதியை அதில் போட்டு பூஜை செய்வார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலின் அற்புதம்
Comments
Post a Comment