பந்தல்
முவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வரி வசூல் செய்ய காற்றோட்டமான இடத்தைத் தேடி சென்றனர். அப்போது கிடைத்த நல்ல இடத்தில் பந்தல் அமைத்து வரி வசூல் செய்தனர். அது காலப்போக்கில் “முப்பந்தல்” எனப் பெயரடைந்தது என்று செவி வழிச் செய்தி கூறுகிறது.
கோவிலின் பக்கத்தில் உள்ள பணகுடியில் இருந்த அருணாச்சலத்தின் மனைவிக்கு தொடர்ந்த வயிற்றுவலியால் கவலையடைந்தார். அவரது பேத்தி கனவில் இசக்கியம்மன் “முப்பந்தல் மரத்திற்குக் கீழே நான் இருக்கிறேன்” எனக் கூறியதாக தெரிகிறது. அந்த இடத்தில் கண்ட கல்லை சிலையாக்கி கோவில் அமைக்கப்பட்டது.
சிறு குழந்தைகள் மண்ணில் அம்மன் சிலைபோல் வடிவமைத்து விளையாடினர். மறுநாள் அந்த இடத்தில் ஒருவரின் கால் தட்டியதும், அங்கு சாமி வந்து “நான் இந்த இடத்தில் இருக்கிறேன்” என்று கூறியதாக நம்பப்படுகிறது. அதனால் அந்த இடத்தில் கல் வைத்து வழிபாடு தொடங்கப்பட்டது.
இன்றும் இங்கு மக்கள் அதிக அளவில் வருகின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அல்லாமல் தினமும் கூட்டம் காணப்படுகிறது. பௌர்ணமியன்று பூஜை செய்தால் பெண்களுக்கு திருமணம் நடைபெறுகிறது. குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் கட்டி வருகிறார்கள்; அவர்களுக்கும் குழந்தை கிடைக்கிறது. வேண்டுதல் நிறைவேறிய பின் சர்க்கரை பொங்கல் வைத்து நன்றி செலுத்துகிறார்கள்.
இடம் : நெல்லை மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நுழையும் சின்ன கிராமம் “முப்பந்தல்” ஆகும்.
Comments
Post a Comment