Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

குழந்தை பாக்கியம் தரும் முப்பந்தல் இசக்கி அம்மன் | சிறந்த தலங்கள் மற்றும் வழிபாடுகள்

பந்தல்

முப்பந்தல் இசக்கி அம்மன்

முவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வரி வசூல் செய்ய காற்றோட்டமான இடத்தைத் தேடி சென்றனர். அப்போது கிடைத்த நல்ல இடத்தில் பந்தல் அமைத்து வரி வசூல் செய்தனர். அது காலப்போக்கில் “முப்பந்தல்” எனப் பெயரடைந்தது என்று செவி வழிச் செய்தி கூறுகிறது.

கோவிலின் பக்கத்தில் உள்ள பணகுடியில் இருந்த அருணாச்சலத்தின் மனைவிக்கு தொடர்ந்த வயிற்றுவலியால் கவலையடைந்தார். அவரது பேத்தி கனவில் இசக்கியம்மன் “முப்பந்தல் மரத்திற்குக் கீழே நான் இருக்கிறேன்” எனக் கூறியதாக தெரிகிறது. அந்த இடத்தில் கண்ட கல்லை சிலையாக்கி கோவில் அமைக்கப்பட்டது.

சிறு குழந்தைகள் மண்ணில் அம்மன் சிலைபோல் வடிவமைத்து விளையாடினர். மறுநாள் அந்த இடத்தில் ஒருவரின் கால் தட்டியதும், அங்கு சாமி வந்து “நான் இந்த இடத்தில் இருக்கிறேன்” என்று கூறியதாக நம்பப்படுகிறது. அதனால் அந்த இடத்தில் கல் வைத்து வழிபாடு தொடங்கப்பட்டது.

இன்றும் இங்கு மக்கள் அதிக அளவில் வருகின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அல்லாமல் தினமும் கூட்டம் காணப்படுகிறது. பௌர்ணமியன்று பூஜை செய்தால் பெண்களுக்கு திருமணம் நடைபெறுகிறது. குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் கட்டி வருகிறார்கள்; அவர்களுக்கும் குழந்தை கிடைக்கிறது. வேண்டுதல் நிறைவேறிய பின் சர்க்கரை பொங்கல் வைத்து நன்றி செலுத்துகிறார்கள்.

இடம் : நெல்லை மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நுழையும் சின்ன கிராமம் “முப்பந்தல்” ஆகும்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...