பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது பஞ்சபட்சி. நிலம் (வல்லூறு), நீர் (ஆந்தை), நெருப்பு (காகம்), காற்று (கோழி), ஆகாயம் (மயில்). பட்சிகள் மொத்தம் ஐந்து வல்லூறு (ந), ஆந்தை (ம), காகம் (சி), கோழி (வ), மயில் (ய). பஞ்ச பட்சிகள் பஞ்சாட்சர மந்திரத்தின் (நமசிவய) ஒவ்வொரு எழுத்துக்களையும் கொண்டுள்ளன. ஒருவரின் நட்சத்திரம் மூலம் பட்சி பார்ப்பது நட்சத்திர பட்சி எனப்படும்.
வல்லூறு
அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகினி, மிருகசீரிஷம்.
ஆந்தை
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம்.
காகம்
உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்.
கோழி
அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்.
மயில்
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.
நட்சத்திரம் தெரியாதவர்கள் தங்களுடைய பெயரில் முதல் எழுத்தை வைத்து பார்ப்பது அச்சரபட்சியாகும். முருகன் என்ற பெயரில் முதல் எழுத்து மு என்பதை 'ம் + உ' என்று பிரித்து 'உ' க்கான பட்சியை பார்க்கவும். 'உ' க்கான வளர்பிறை பட்சி காகம்.
வளர்பிறை
வல்லூறு - அ.ஆ
ஆந்தை - இ.ஈ
கோழி - எ.ஏ
காகம் - உ.ஊ
மயில் - ஒ.ஓ
தேய்பிறை
வல்லூறு - இ.ஈ
ஆந்தை - உ.ஊ
கோழி - அ.ஆ
காகம் - ஒ.ஓ
மயில் - எ.ஏ
ஒருவர் தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு செயலுக்காகவோ பட்சியை பார்த்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும். அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கீழ்கண்டவாறு பட்சிகள் பலம் பெறும்.
அரசு - 100%
ஊண் - 75%
நடை - 50%
துயில் - 25%
சாவு - 0
ஒவ்வொரு பட்சியும் பகல் ஐந்து தொழிலையும் இரவு ஐந்து தொழிலையும் செய்யும் சில நாட்களில் பட்சி செயலிழந்து காணப்படும். அது படுபட்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் சுப நிகழ்ச்சிகள் பிரயாணம் மேற்கொள்வதை மற்றும் மருத்துவம் செய்வதை தவிர்ப்பது நல்லது. இவை பகல் மற்றும் இரவு வேலைகளுக்கும் பொருந்தும்.
வளர்பிறை படுபட்சி நாட்கள்
வல்லூறு - வியாழன், சனி
ஆந்தை - ஞாயிறு, வெள்ளி
கோழி - செவ்வாய்
காகம் - திங்கள்
மயில் - புதன்
தேய்பிறை படுபட்சி நாட்கள்
வல்லூறு - செவ்வாய்
ஆந்தை - திங்கள்
கோழி - வியாழன், சனி
காகம் - ஞாயிறு
மயில் - புதன், வெள்ளி
இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் இருக்கின்றன. அன்று செய்யும் காரியங்கள் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும். எல்லா சுபகாரியங்களும் செய்யலாம்.
பகல் ஊண் பட்சி நாள் வளர்பிறை
வல்லூறு - ஞாயிறு, செவ்வாய்
ஆந்தை - புதன், திங்கள்
கோழி - வெள்ளி
காகம் - வியாழன்
மயில் - சனி
இரவு ஊண் பட்சி நாள் வளர்பிறை
வல்லூறு - வெள்ளி
ஆந்தை - ஞாயிறு
கோழி - திங்கள், புதன்
காகம் - ஞாயிறு, செவ்வாய்
மயில் - வியாழன்
பகல் ஊண் பட்சி நாள் தேய்பிறை
வல்லூறு - வெள்ளி
ஆந்தை - வியாழன்
கோழி - ஞாயிறு, செவ்வாய்
காகம் - புதன்
மயில் - திங்கள், சனி
இரவு ஊண் பட்சி நாள் தேய்பிறை
வல்லூறு - ஞாயிறு, செவ்வாய்
ஆந்தை - புதன்
கோழி - திங்கள், சனி
காகம் - வியாழன்
மயில் - வெள்ளி
படுபட்சி நாளில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் அரசு என்ற நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. அதே போல ஊண் பட்சிநாளில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் துயில் மற்றும் சாவில் இருந்தாலும் அது பலம் இழந்தது ஆகாது.
அடுத்து பட்சியின் பொதுவான நிர்ணயங்கள். பட்சிகளின் பலம் இறங்கு முகமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காகம்
ஆந்தை
வல்லூறு
கோழி
மயில்
அதாவது காகம் எல்லாவற்றிலும் பலம் மிகுந்தது. மயில் எல்லாவற்றையும் விட பலம் குறைந்தது. இதன் மூலம் முடிவுக்கு வரலாம். இது எதற்கு என்றால் உங்கள் பட்சி காகம் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் பட்சியை விட பலம் குறைந்த ஆந்தை மயில் உடன் போட்டியிட்டு வெற்றி பெறுவது சுலபம். உங்கள் பட்சி படுபட்சியாக இருந்து எதிராளியின் பட்சி ஊண் பட்சி இருந்தால் நீங்கள் வெற்றி பெறுவது கடினம். இது தங்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தலாம். பிறருக்கு தீங்கு செய்வதற்கு அல்ல
தனக்கு சாதகமாக காரியங்கள் சாதித்துக் கொள்வதற்காக இந்த பட்சிகளின் நிலை அறிந்து செயல்பட்டால் வெற்றி கிட்டும். ஊண்பட்சி நாட்களில் வேலைக்கு மனு கொடுத்தால் நமக்கு சாதகமான வாய்ப்பு கிடைக்கும். ஐந்து பட்சிகளும் ஐந்து விதமான தொழில்களை செய்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 60 நாழிகை. பகல் 30 நாழிகை இரவு 30 நாழிகை. பகல் 30 நாழிகை 6 நாழிகை வீதம் ஐந்து தொழில்களை செய்கின்றன. ஒரு நாழிகை என்பது இரண்டு மணி 24 நிமிடங்கள் ஆகும்.
வளர்பிறை பகல் பொழுதில் ஊண் நடை அரசு துயில் சாவு என்ற தொழிலை செய்யும். இரவு நேரத்தில் ஊண் அரசு சாவு நடை துயில் என்ற தொழிலை செய்யும். தேய்பிறை பகல் பொழுதில் ஊண்சாவு துயில் அரசு நடை என்ற தொழிலை செய்யும். தேய்பிறை இரவு பொழுதில் ஊண் துயில் நடை சாவு அரசு
என்ற தொழிலை செய்யும்.
வளர்பிறை மற்றும் தேய்பிறையில் ஞாயிறு செவ்வாய் ஒரே தொழிலை செய்யும். வளர்பிறையில் திங்கள், புதன் தேய்பிறையில் திங்கள், சனி பட்சிகளின் செயல் ஒரே மாதிரியாக இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தவாறு மாறி வரும். இது அன்று சூரிய உதயத்திலிருந்து கணக்கெடுக்க வேண்டும்.
வல்லூறு வளர்பிறை
நட்பு - மயில், ஆந்தை
பகை - காகம், கோழி
வல்லூறு தேய்பிறை
நட்பு - மயில், காகம்
பகை - ஆந்தை, கோழி
ஆந்தை வளர்பிறை
நட்பு - வல்லூறு, காகம்
பகை - மயில், கோழி
ஆந்தை தேய்பிறை
நட்பு - கோழி, காகம்
பகை - வல்லூறு, மயில்
காகம் வளர்பிறை
நட்பு - ஆந்தை, கோழி
பகை - வல்லூறு, மயில்
காகம் தேய்பிறை
நட்பு - ஆந்தை, வல்லூறு
பகை - மயில், கோழி
கோழி வளர்பிறை
நட்பு - மயில், ஆந்தை
பகை - காகம், வல்லூறு
கோழி தேய்பிறை
நட்பு - மயில், ஆந்தை
பகை - காகம், வல்லூறு
மயில் வளர்பிறை
நட்பு - வல்லூறு, கோழி
பகை - ஆந்தை, காகம்
மயில் தேய்பிறை
நட்பு - வல்லூறு, கோழி
பகை - ஆந்தை, காகம்
நட்பு பட்சிகளுடன் சேர்ந்து இருப்பது நன்மை பயக்கும். பகை பட்சிகளுடன் சேர்ந்து இருப்பதை தவிர்ப்பது நல்லது.
Comments
Post a Comment