Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

மகாலக்ஷ்மி மந்திரம்

வியாபாரம் செய்யும் இடங்களில் மந்தமான சூழ்நிலை இருக்கும் பொழுது இந்த மந்திரத்தை உச்சரித்தால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து பண வரவு அமோகமாக இருக்கும். மகாலட்சுமியின் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை உங்கள் கடை மற்றும் தொழில் ஸ்தாபனங்களில் உச்சரித்தால் வியாபாரம் மற்றும் தொழில் பன்மடங்கு விருத்தியாகும். அது போல் நீங்கள் வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால் பணவரவு அதிகரித்துக் கொண்டே வருமாம்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு கடன்கள் வாங்கும் சூழ்நிலையில் ஒரு சிலர் இருப்பார்கள். அவர்கள் அவர்களுடைய தொழில் செய்யும் இடத்தில் வெள்ளிக் கிழமை மற்றும் பவுர்ணமி தினத்தில் காலையில் கடையை திறந்ததும் மகாலக்ஷ்மி தேவிக்கு விளக்கு ஏற்றும் பொழுது, பாலில் ஏலக்காயும் கலந்து நிவேதனம் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு தாம்பூலம் வைத்து, பாயாசம், கற்கண்டு, பழங்கள் முதலியவற்றை நிவேதனமாக வைத்து மகாலட்சுமி தேவியை வழிபட உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.

விளக்கேற்றும் பொழுது கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்கவும். நீங்கள் சாதாரணமாக வாடிக்கையாளர்கள் யாரும் வராத சமயத்தில் இந்த மந்திரத்தை தொடர்ந்து மனதிற்குள் உச்சரித்து வந்து கொண்டே இருந்தால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து தொழில் வளம், வியாபாரம் விருத்தி உண்டாகும்.அது போல் கடையில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாக ஒரு பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து விளக்கேற்றும் பொழுது கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் அந்த தண்ணீர் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும். இந்த சக்தி வாய்ந்த தண்ணீரை கடை முழுவதும் தெளித்து வர வேண்டும். இதை காலையில் 6.15 முதல் 6.45 மணிக்குள் செய்து விட வேண்டும். இந்த புனிதமான தீர்த்தத்தை கடை மற்றும் தொழிற்சாலை போன்ற இடங்களில் தெளித்து விட்டால் தொழில் மற்றும் வியாபார ரீதியான கஷ்ட, நஷ்டங்களை எதிர் கொள்பவர்களுக்கு நல்லதொரு மாற்றம் நிகழும். கடை தாமதமாக திறந்தால் வீட்டில் செய்து கடையில் தெளிக்கலாம்.

மந்திரம்:
ஓம் நமோ பகவதி பத்மா பத்மாவதி!
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பூர்வாய தக்ஷிணாய!
பஸ்சிமாய உத்தராய ஆனுபூரக சர்வே!
ஜன வஸ்யம் குரு ஸ்வாஹா!!

இதோ உங்களுக்கான மகாலக்ஷ்மி மந்திரம்:

ஸ்ரீசுக்ல மகா சுக்லே நவாங்கே ஸ்ரீமஹாலக்ஷ்மி நமோ நமஹ!!

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...